Latestமலேசியா

கார சாராம் உணவகத்தின் 16ஆவது கிளை திறப்பு விழா

ஜோகூர் பாரு, மார்ச் 27 – மலேசியாவில் தனித்துவமான சட்டி சோறுக்குப் பிரபலமான கார சாரம் உணவகத்தின் 16வது கிளையின் திறப்பு விழா கடந்த மார்ச் 21ஆம் திகதி அன்று நடைபெற்றது.

தப்பா நாடாளுமன்ற உறுப்பினார் டத்தோ ஸ்ரீ சரவணன் அவ்வுணவகக் கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

2020ஆம் ஆண்டில் மலேசிய உணவு வணிகத்தில் கால் பதித்த கார சாரம், தற்போது 16வது கிளையை திறந்து வெற்றிநடை போடுகிறது.

பொதுவாகவே இந்தியர்களின் உணவு முறையில் மசாலையும் காரமும் எப்பொழுதும் ஒரு தனிசுவையைக் கொடுக்கும். அதனை தன் உணவகத்தில் ஒரு சிறப்பு அம்சமாக கொண்டு மக்கள் மனதை தன்வயப்படுத்தி குறுகிய காலக்கட்டத்தில் கார சாரம் அதன் உச்சத்தைப் பிடித்திருக்கிறது.

இதனிடையே, முன்னதாக 15வது கிளையை பினாங்கில் திறந்த கார சாரம், drive-thru எனும் வசதியை அறிமுகப்படுத்தி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!