கோலாலம்பூர், பிப் 27 – நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் அரச உரைக்கு நன்றி தெரிவித்து விவாதத்தில் பங்கேற்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக தயாராக இருப்பதாக தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ Ramanan Ramakrishnan தெரிவித்திருக்கிறார். 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதலாவது கூட்டத்தை மாட்சியை தங்கிய பேரரசர் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மக்களுக்கு உதவுவது மற்றும் நாட்டை மேம்படுத்துவற்காக தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதில அரச உரை மீதான விவாதத்தில் அனைத்து எம்.பிக்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேரரசர் கேட்டுக்கொண்டது தொடர்பில் கருத்துரைத்தபோது ரமணன் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும்போது அனைத்து உறுப்பினர்களும் கனிவாகவும் பரஸ்பரத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென பேரராசர் நினைவுபடுத்தியிருந்தார். மேலும் நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களின் நடவடிக்கைகள், நாட்டின் கடன் மற்றும் அரசியல் நிலைத்தன்மை போன்ற விவகாரங்கள் குறித்தும் பேரரசர் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தார்.