கோலாலம்பூர், ஜன 29 -கோலாலம்பூர்கம்போங் பாருவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஆறு வீடுகள் அழிந்தன. இன்று காலை மணி 10.18 அளவில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக தித்திவங்சா, துன் ரசாக் மற்றும் செந்தூல் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி முஹம்மட் ஹபிட்ஸ் யாக்கோப் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்களின் விவேகமான நடவடிகையினால் அருகேயுள்ள வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லை. இத்தீவிபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரண நடத்தப்படுவதாக முஹம்மட் ஹபிட்ஸ் தெரிவித்தார்.
Check Also
Close