Latestமலேசியா

ஈப்போவில், நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட லோரியை சிமெண்ட் லோரி மோதித் தள்ளியது ; நான்கு துப்புரவு பணியாளர்கள் காயம்

ஈப்போ, மார்ச் 4 – பேராக், ஈப்போவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையோரத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி ஒன்றை, சிமெண்ட் லோரி ஒன்று மோதித் தள்ளியதில், துப்புரவு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் நால்வர் காயமடைந்தனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலிருந்த, ஈப்போவை நோக்கி வெளியேறும் இடத்தில் அவ்விபத்து நிகழ்ந்தது.

புற்களை வெட்டி சுத்தம் செய்யும் பணிகளுக்காக, சாலையோரத்தில் லோரியை நிறுத்தி, பணியாளர்கள் சிலர் கூம்புகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.

பின்னால் இருந்து வந்த சிமெண்ட் லோரி, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த துப்புரவு லோரியை மோதித் தள்ளியது.

அவ்விபத்தில் காயமடைந்த அனைரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!