சிபு , ஜன 2 – சிபுவில் ஜாலான் வோங் கிங் ஹுவோவில் காப்பிக் கடை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிபு போலீஸ் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.
அந்த சம்பவத்தில் 27 மற்றும் 33 வயதுடைய மூவரும் அந்த காப்பிக் கடையில் நண்பர்களுடன் பானம் அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களை அடையாளம் தெரியாத இரண்டு சந்தேகப் பேர்வழிகள் சுட்டுவிட்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 307ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.