டெல்லி, ஜன 14 – மோமோஸ் எனப்படும் ஒரு வகை உணவுக்குக் கூடுதலாகச் சட்னி கேட்ட வாடிக்கையாளரை, கடை உரிமையாளர் கத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகாஸ் என்பவரின் உணவகத்தில், 34 வயதான சந்தீப் என்பவர் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது சந்தீப் கூடுதலாகச் சட்னி கேட்டபோது, விகாஸ் மறுக்கவே இருவக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், கடை உரிமையாளர் சந்தீப்பை கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயமும் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கடை உரிமையாளரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.