கோத்தா பாரு, ஜனவரி 2 – கிளந்தான், பெங்காலான் செப்பாவிலுள்ள, பாடாங் தெம்பாக் தொழிற்பேட்டை பகுதிக்கு அருகில், சாலையோரத்தில் அசையாமல் படுத்திருந்த மூன்று மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
நேற்றிரவு மணி ஒன்பது வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அவ்வழியே சென்ற வாகனமோட்டிகள் வழங்கிய தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பெங்காலான் செப்பா தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், பத்து கிலோகிராமுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த மலைப்பாம்பை பிடித்தனர்.
வால் பகுதியை சீண்டிய போது, சாலையை கடந்து தப்பிக்க முயன்ற அந்த பாம்பு மூன்று நிமிடங்களில் பிடிபட்டது.
முன்னதாக, சாலையோரத்தில் அசையாமல் இருந்த அந்த மலைப்பாம்பை காண அவ்வழியே சென்ற வாகனமோட்டிகள் குவிந்ததாக கூறப்படுகிறது.