
ஜொகூர், பத்து பஹாட்டிலுள்ள, Homestay தங்குமிடத்தில் கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் 11 உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று பிற்பகல் மணி 2.30 வாக்கில், உணவை விநியோகிக்கும் நபர் ஒருவருக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆடவர்கள் சிலருக்கும் இடையில் அச்சண்டை மூண்டதாக, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில் இரு தரப்பிடமிருந்தும் புகார் பெறப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து, 17 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 11 ஆடவர்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, சிவப்பு நிற சட்டை அணிந்திருக்கும் ஆடவர் ஒருவர், உணவு விநியோகிப்பாளர் ஒருவரிடம் சண்டையிடும் காணொளி வைரலானது.
சினமடைந்த அந்த உணவு விநியோக்கிப்பாளர் பின்னர் அவ்வாடவரை முகத்தில் குத்துகிறார். அதனை தொடர்ந்து, ஆடவர் கும்பல் ஒன்று உணவு விநியோகிப்பாளர் தாக்குகிறது. அப்பொழுது உணவு விநியோகிப்பாளரை காப்பாற்ற முயலும் அவரது மனைவியும் தாக்குதலுக்கு இலக்காகும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.