Latestஉலகம்

தாய்லாந்தில், காட்டு யானை அட்டூழியம்; வீட்டின் சுவரை மோதி சேதப்படுத்தியதால் உரிமையாளர் பீதி

பேங்கோக், டிசம்பர் 8 – தாய்லாந்து, புரிராம் கிராமத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று வீடொன்றின் சுவரை மோதி சேதப்படுத்தியது.

உள்நாட்டு நேரப்படி, நேற்று முன்தினம், அதிகாலை மணி மூன்று வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் 56 வயது மனைவி, பேரிச்சல் கேட்டு தூக்கம் களைந்து எழுந்து அறைக்கு வெளியே வந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் சுவரை மோதித் தள்ளிவிட்டு காட்டு யானை ஒன்று, சில மீட்டர் தூரத்தில் நின்றுக் கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ந்து போனார்.

அச்சம்பவத்தில் வீட்டின் சுவர் சேதமடைந்ததோடு, கண்ணாடிகளும் உடைந்து தரைமட்டமாகின.

தாய்லாந்தில் காடுகள் அதிகம் அழிக்கப்பட்டு வருவதால், காட்டு யானைகள், உணவு தேடி கிராமங்களில் புகுவது வழக்கமாகியுள்ளது.

எனினும், யானை வீடொன்றை மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!