Latestமலேசியா

போதைப் பொருள் குற்றச்சாட்டு மரண தண்டனையிலிருந்து காளிதாஸ் விடுதலை

ஈப்போ, நவ 22 – அபாயகரமாக போதைப் பொருள் சட்டத்தின்கீழ் மரண தண்டணை விதிக்கப்படும் மூன்று குற்றச்சாட்டுக்களிலிருந்து இந்திய வர்த்தகர் ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். காளிதாஸ் ராமையா என்ற 50 வயது ஆடவர் ஹெரொய்ன் , மெத்தபெத்தமின் மற்றும் மோர்பின் போதைப் பொருளை வைத்திருந்தாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இரவு மணி 9 அளவில் புந்தோங்கிலுள்ள தமது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற டொயோட்டா கொரோலா காரில் அந்த போதைப் பொருட்களை வைத்திருந்ததாக காளிதாஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. காளிதாஸிற்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களையும் நிருபிப்பதற்கு அரசு தரப்பு தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்வதாக ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமட் தீர்ப்பளித்தார். காளிதாஸ் சார்பில் வழக்கறிஞர் சரண் சிங் மற்றும் அரசு தரப்பில் டி. பி. பி. சைபுல் அக்மல் மோட் சைட் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர். .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!