Latestமலேசியா

போதைப் பொருள் குற்றச்சாட்டில் திருத்தம் முன்ளாள் டாக்சி ஓட்டுனருக்கு 10 ஆண்டு சிறை

புத்ரா ஜெயா- 1029.2 கிரேம் எடையுள்ள கன்னபிஸ் போதைப் பொருளை கடத்த முயன்றதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு திருத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் டாக்சி ஓட்டுனரான எம்.பாஸ்கரன் மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

மூன்று நீதிபதிகள் அமர்வைக் கொண்ட அப்பீல் நீதிமன்றம் அவருக்கு எதிராக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 52 வயதுடைய பாஸ்கரன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு இந்த குறைந்த தண்டனை விதிக்கப்பட்டது.

பாஸ்கரனுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அவருக்கு கசையடி கொடுப்பது தவிர்க்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியிலிருந்து அவருக்கான சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி ஹடாரியா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!