Latestமலேசியா

SPAN ஆணையத்தின் தலைவராக சார்ல்ஸ் சந்தியாகோ மீண்டும் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 27 – சார்ல்ஸ் சந்தியாகோ, மீண்டும் SPAN – தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது நியமனம், மார்ச் 20 -ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக SPAN ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
சந்தியாகோ 2025-ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பை ஏற்றிருப்பார்.

இதற்கு முன்னதாக அவர் , பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் இருந்த போது, 2018 நவம்பரில் இருந்து ஏப்ரல் 2020 வரை , SPAN ஆணயத்தின் தலைவராக இருந்துள்ளார்.
அந்த ஆணையம், தீபகற்ப மலேசியாவிலும் ,லாபுவானிலும் நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் தொடர்பான சேவைகளை ஒழுங்குபடுத்தும் சுயேட்சை அமைப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!