ஷா ஆலாம், டிசம்பர் 7 – நான்காண்டுகளுக்கு முன், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சிறு விபத்து காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆடவர் ஒருவரை தாக்கி மரணம் விளைவித்த குற்றத்திற்காக, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பணியாளர் ஒருவருக்கு, 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
2019-ஆம் ஆண்டு, வங்கி நிர்வாகியான சையிட் முஹமட் டானியல் சையிட் சாகிர் என்பவரை கொலை செய்ததாக, குற்றவியல் சட்டத்தின் 304 உட்பிரிவு A பிரிவின் கீழ், அந்த 45 வயது நபருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
குற்றம்சாட்டப்பட்ட நபர், அரசாங்க தரப்பு சாட்சியாளர்கள் மற்றும் தற்காப்பு வாதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அந்த முன்னாள் தகவல் தொழில்நுட்ப பணியாளர் குற்றவாளி என இரு நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதி அவருக்கான தண்டனையை இன்று அறிவித்தார்.