Latestமலேசியா

பஹாங்கில் கனரக இயந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி மரணம்

ஜெராண்டுட், மார்ச் 9 -பஹாங், ஜெராண்டுட்டில் மரக்கட்டைகளை ஏற்றியிருந்த லாரியில் இருந்து விழுந்த அதன் ஓட்டுநர், கனரக இயந்திரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜாலான் ஜெராண்டுட் – பாடாங் பியோல் சாலையின் 26-ஆவது கிலோ மீட்டரில் வெள்ளிக் கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அதில் குவாலா லிப்பிசைச் சேர்ந்த 41 வயது சைஃபுல் நிசாம் சக்காரியா உடல் நசுங்கி மாண்டதாக ஜெராண்டுட் OCPD Supt அஸ்மான் மாட் காமிஸ் கூறினார்.

சம்பவத்தின் போது, சைஃபுல் டிரேலர் லாரியில் ஏறி இரும்புச் சங்கிலியால் மரக்கட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது தீடீரென அவர் கால் இடறி லாரின் பின் பக்கம் விழுந்து விட்டார்.

எனினும், அங்கு மரக்கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த கன ரக இயந்திரத்தின் ஓட்டுநர், சைஃபுல் விழுந்ததைக் கவனிக்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஃசைப்புல் மீது அவ்வியந்திரம் ஏறி அவர் அங்கேயே உடல் நசுங்கி மாண்டார்.

குற்றவியல் சட்டம் 304A பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!