ஜோர்ஜ் டவுன், நவ 30 – பினாங்கில் 100 பில்லியன் ரிங்கிட் மதிப்புடை அரிய வகை மண் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார். தெலுக் பஹாங், பாலிக் புலாவ் மற்றும் நிபோங் தெபால் வட்டாரத்தில் இந்த அரிய வகை மண் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தில் அவர் கூறினார். உலோக மற்றும் நிலவியல்துறை மேற்கொண்ட மாதிரி பரிசோதனைகளைத் தொடர்ந்து இந்த அரிய மண் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அடுத்து என்ன செய்வது என்பதற்கான ஆலோசனையையும் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக சௌ கோன் இயோவ் கூறினார்.