கர்நாடகா, டிச 28 – இறந்த சிறுவர்களின் உடலை உப்பில் புதைத்தால் உயிர் வரும் என்பதை நம்பி, செய்த சம்பவம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24ஆம் திகதி குளத்தில் குளிக்கச் சென்ற 11 வயது நாகராஜ் மற்றும் 12 வயது ஹேமந்த் தூர்தஷ்டவசமாக மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களை நீண்ட நேரம் உப்பில் புதைத்து வைத்தால், அவர்களுக்கு உயிர் கிடைக்கும் என்று சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பார்த்த காணொளியை நம்பி அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் இக்காரியத்தை செய்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள், இதற்காக 200 கிலோகிராம் உப்பை பயன்படுத்தியதாகவும் , 6 மணி நேரம் ஆகியும் சிறுவர்கள் உடலில் எந்தவொரு அசைவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ், அந்த பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி பின்னர் அச்சிறுவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படன.
இதனிடையே அவர்கள் பயன்படுத்திய 200 கிலோ உப்பின் விலை 5000 ரூபாய் அதாவது 275 ரிங்கிட்டாகும்.