Latestமலேசியா

அம்பாங்கில் கார், மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்தது; இருவர் மரணம்

அம்பாங் ஜெயா, டிச 19- அம்பாங், ஜாலான் உத்தாமா கம்போங் லெம்பா ஜெயா உத்தாராவில் மரம் ஒன்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் இருவர் மரணம் அடைந்தனர். இன்று மாலை மணி 3. 51 அளவில் இந்த துயரச் சம்பவம் குறித்த தகவலை தாங்கள் அறிந்ததாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். உள்நாட்டைச் சேந்த இரண்டு குடியிருப்புவாசிகள் இறந்ததை அவர் உறுதிப்படுத்தினார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே கார் ஓட்டுனர் இறந்தார். காயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டி அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டவுடன் அங்கு இறந்ததாக அஸாம் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!