கோலாலம்பூர், பிப் 6 – இரு கட்டிடங்களின் சந்தில் நிறுத்தப்பட்ட இரண்டு கார்களுக்கு இடையில் மலம் கழிக்க தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதாக நம்பப்படும் ஒருவரின் ஆநாகரீகமான செயலை சித்தரிக்கும் வீடியோ ஒன்று பொது மக்களின் அதித கோபத்தை பெற்று வைரலாகி வருகிறது.
அந்த நபர் மலம் கழிப்பதற்கு முன், தனது கால்சட்டையை எந்த கூச்சமும் இல்லாமல், கீழே இறக்குவதை அந்த சம்பவ இடத்தில் இருந்த நீல நிற பெரோடுவா அதிவா வாகனத்தின் டேஷ்போர்ட் கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜோகூரில் புக்கிட் இண்டாவில் இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து, அந்த டாஷ்கேம் உரிமையாளர் சமூக வலைத்தில் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார். அந்த ஆடவர் தனது வாகனத்தின் முன்புறத்தை பொது கழிப்பறை போல் எண்ணி மலம் கழித்துள்ளார் என அந்த வலைத்தளவாசி பதிவு செய்துள்ளார்.
இதனிடையே வைரலான இந்த வீடியோவின் கிளிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் இன்னமும் கிடைக்கவில்லை என இஸ்கந்தர் புத்தேரி மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான ரஹ்மாட் ஆரிஃபின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு அநாகரீகமான செயலையும் அல்லது அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால், RM100 ரிங்கட் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.