Latestஇந்தியா

ஜம்மு காஷ்மீரில் மோசமான பனிச்சரிவு; 24 மணி நேர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஸ்ரீநகர், பிப்ரவரி 10 – இந்தியா, ஜம்மு – காஷ்மீர், ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சோனாமார்க் பகுதியில், மோசமான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், அச்சம்பவத்தில் இதுவரை உயிருடற் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

செங்குத்தான மலைப் பகுதியிலிருந்து, திடீரென பனிப்பாறைகள் சரிந்து விழும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

பனிச்சரிவு மீண்டும் ஏற்படும் சாத்தியம் உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோனாமார்க்கிலுள்ள, சோஜிலா சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதிக்கு அருகே அந்த பனிச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இம்மாதம் தொடக்கத்திலிருந்து, ஜம்மு – காஷ்மீரில், வரலாறு காணாத மோசமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

அதனால், அங்குள்ள உயரமான பகுதிகளில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி முதல் வாரத்தில் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளுக்கு அதிகாரிகள் பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!