Latestமலேசியா

பிலிப்பைன்ஸ்ஸில் வலுவான நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

மணிலா, டிச 3 – பிலிப்பைன்ஸ்ஸில் ரெக்டர் கருவியில் 7.6 அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியதை தொடர்ந்து அந்நாட்டிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்த எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது. பிலிப்பைன்ஸ்ஸில் கிழக்குப் பகுதியான மிண்டானாவ் தீவில் நேற்றிரவு மணி 10.37 அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

63 கிலோமீட்டர் அழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் மின் விநியோக பாதிப்பு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. நில நடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ்ஸின் தென் பகுதியிலுள்ள புத்துவான் நகரம்யிலுள்ள மானுவல் ஜே. சாண்டோஸ் மருத்துவமனையில் நேற்றிரவு நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர். எனினும் சேதங்கள் குறித்த உடனடி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!