கோலாலம்பூர், டிச 30 – முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுட்டின் ‘Tun Daim Zainuddin’ மீதான விசாரணை நாட்டி ஊழல் தடுப்பு மற்றும் சட்டவிரோத பண பாட்டுவாடா சட்டங்களின் கீழ் முறையாக மேற்கொள்ளபடுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி ‘MACC’ தெரிவித்துள்ளது.
எம்.ஏ.சி.சி சுயேட்சையாக இயங்கும் ஒரு அமைப்பு என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
துன் டாயிமிற்கு சொந்தமான 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இல்ஹாம் ‘Ilham’ கட்டிடத்தை எம்.ஏ.சி.சி கைப்பற்றியதை அடுத்து துன் டாயிம் அதிருப்தி கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எம்.ஏ.சி.சி மீதும் பிரதமர் அன்வார் மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரின் அறிக்கை குழப்பத்தையும் தவறான புதிதலையும் ஏற்படுத்தியிருப்பதாக எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது.
தாங்கள் இது வரை துன் டாயிம் குற்றவாளி என எங்கும் கூறியதில்லை எனவும் அது விளக்கியுள்ளது.