புதுடில்லி, டிச 17 – திருபாய் அம்பானி அனைத்துலக பள்ளியில் நிகழ்ந்த ஆண்டு விழாவில் மகள் ஆரத்யா கலந்துகொண்ட நிகழ்ச்சியை அவரது தாயார் ஐஸ்வர்யா மிகவும் பெருமிதத்துடன் ரசிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்த தங்கள் பிள்ளைகளின் படைப்புகளை கண்டு மகிழ்ந்தனர். மேடையில் ஆராத்யா பங்கெடுத்த அங்கத்தில் அவரின் நடிப்பு திறனை ஐஸ்வர்யா ராய் வியந்து பார்த்து ரசிக்கிறார். சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், பெருமைமிக்க அம்மா ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகளின் நடிப்பை பார்த்து புன்னகைப்பதை பலரும் ரசித்தனர் . தாய் 8 அடி பாய்ந்தால் மகள் 16 அடி பாய்வாள் என்பதற்கு இது சான்று என கூறினர்.
பல ரசிகர்கள் ஆரத்யாவின் திறனை கண்டு தங்களது பாராட்டுக்களை ஐஸ்வர்யாவுக்கு தெரிவித்துள்ளனர். இதனிடையே , அமிதாப் பச்சன்-நும் தனது வலைப்பதிவில் ஆராத்யா மேடையில் ஓர் இயல்பான திறனை முழுமையாக வெளிப்படுத்தியதாகக் கூறினார்.