Latestமலேசியா

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது – இருவர் மரணம், மூவர் காயம்

சிபித்தாங், பிப் 15 – சபாவில் சிபித்தாங்கில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா கார் விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர். அந்த கார் விபத்திற்குள்ளாகுவதற்கு முன் ஜே.பி.ஜே எனப்படும் சாலை போக்குவரத்துத்துறையின் ரோந்து வாகனம் துரத்திச் சென்றதாக கூறப்பட்டது. நேற்று மாலை மணி 5.08 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் அக்காரை ஓட்டிய 19 வயது முகமட் கைருல் அப்துல்லாவும் பின்னால் அமர்ந்திருந்த 14 வயது நோர்சியா @ பீபி பைசல் ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர். அக்காரின் முன்புறமும் பின்புறமும் அமர்ந்திருந்த 8 ,16 மற்றும் 17 வயதுடைய மூன்று பயணிகள் காயம் அடைந்தனர். ஐவர் சென்ற அந்த புரோட்டோன் வீரா கார் விபத்துக்குள்ளாகியது குறித்து சாலை போக்குவரத்துத்துறை அதிகாரிகளிமிருந்து தகவலைப் பெற்றதை சிபித்தாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சுப்ரிடெண்டன்ட் மைல் சுண்டோங்கி உறுதிப்படுத்தினார்.

பேரங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டு ஜாலான் SFI வழியாக அக்கார் ஓட்டுனர் சென்று கொண்டிருந்தாகவும் தனக்கு பின்னால் ஜே.பி.ஜே வாகனம் வருவதை அறிந்து உடனடியாக வேகமாக சென்றபோது ஒரு வளைவில் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் அக்கார் கவிழ்ந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியதாக மைல் சுண்டோங்கி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!