Latestமலேசியா

கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக ருஸ்டி இசா நியமனம்

கோலாலம்பூர், பிப் 23 -புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின்  துணை இயக்குனர்  ருஸ்டி இசா  கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார்.   மார்ச்  25 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்  45 உயர் போலீஸ் அதிகாரிகளின்   மாற்றல் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் இடைக்கால   போலீஸ் கமிஷனராக  அவர்  பதவி உயர் பெற்றுள்ளார்.

போதைப் பொருள்  குற்றவியல் விசாரணைத் துறையின்   இயக்குனர் காமரூடின் டின் புக்கிட் அமானின்   உள்நாட்டு   பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின்   இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளதாக  போலீஸ் துறையின் செயலாளர்  அலசபினி அஹமட் தெரிவித்துள்ளார். காமரூடினுக்கு பதில்  போதைப் பொருள்  குற்றவியல் விசாரணைத் துறையின்  இயக்குநராக  பினாங்கு போலீஸ் தலைவர்    Khaw Kok Chin  நியமிக்கப்படவுள்ளார்.

புக்கிட அமானின் சேவை மற்றும் பணியாளர்  பிரிவின் துணை நிர்வாக இயக்குநரான  Alwi Zainal Abidin  பினாங்கு  போலீஸ் துணைத்தலைவராக   நியமிக்கப்பட்டுள்ளார் என அலசபினி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். துணைப் பிரதமரின் உதவியாளரான  Nasaruddin  M. Nasir உள்துறை அமைச்சின் கிழக்கு சபா பாதுகாப்பு பணிக்குழுவின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!