காஸா, டிச 16 – காஸாவில் ஹமாஸ் வசம் இருந்து வந்த மூன்று பிணையாளிகளை இஸ்ரேலிய ராணுவம் தவறுதலாக சுட்டுக் கொன்றுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவ பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
காஸாவில் ஹமாஸ் துப்பாக்கிக்காரர்களுடன் நடைபெற்ற சண்டையின்போது அந்த பிணையாளிகள் கொல்லப்பட்டதாக அந்த பேச்சாளர் தெரிவித்தார்.
அந்த பிணையாளிகளின் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் ராணுவம் தங்களது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.