Latestஇந்தியா

டிரோன்களை அழிப்பதற்கு கழுகுகளுக்கு பயிற்சி

பெங்களூரு, மார்ச் 15 – அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆளில்லாத விமானம் என கருதப்படும் டிரோன் (Drone ) மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

வானிலிருந்நது படம் பிடிப்பது , விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று பரவலாக டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவ நடவடிக்கைகளின்போது எதிரியின் நாட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கும் டிரோன் அண்மையக் காலமாக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

அதே வேளையில் தீவிரவாதிகள் போன்ற தவறான நபர்கள் டிரோன்களை பயன்படுத்தி சதிநாச நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அழிவுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சதி நாச வேலைக்காக பயன்படுத்தப்பட்டுவரும் டிரோன்களை அடையாளம் கண்டு அவற்றை அழிப்பதற்கு கழுகுகள் பயன்படுத்தப்படுதப்படுகின்றன.

இந்தியாவில் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் வானில் வட்டமிடும் டிரோன்களை அழிப்பதற்கு கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் நடவடிக்கையில் அம்மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது நிகழ்ச்சிகளின்போது பொறுப்பற்ற தரப்பினர்கள் டிரோனை பயன்படுத்தி அழிவுகளை ஏற்படுத்துவதை தடுப்பதற்காக மூன்று ஆண்டுகளாக ஈகிள் ஸகுவாட் எனப்படும் இரண்டு கழுகளுக்கு சிறப்பு தெலுங்கானாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த கழுகுகள் வானில் பறக்கும் டிரோன்களை சரியாக கண்டறிந்து அழித்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!