Latestமலேசியா

ம.இ. கா. கிளைகளின் வேட்பு மனு தாக்கல் சுமுகமாக நடைபெற்றது

ஈப்போ. மார்ச் 10 – நாடு முழுவதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சுமார் சுமார் 3680 கிளைகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கிளைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று ஒரு பகுதி கிளைகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அமைதியாக நடைபெற்றன.

அந்த வகையில் பேரா மாநிலத்தில் உள்ள சுமார் 600 கிளைகளில் ஒரு பகுதி கிளைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றன. எஞ்சிய கிளைகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்று வருகிறது.

பேரா மாநிலத்தில் முக்கிய தொகுதியாக விளங்கும் ஈப்போ பாராட் தொகுதி காங்கிரசில் உள்ள 33 கிளைகளுக்கான வேட்பு மனு்த்தாக்கல் நேற்று நடைபெற்ற வேளையில் அங்கு எந்த கிளைகளிலும் போட்டியில்லை என தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய தைப்பிங் தொகுதி காங்கிரஸ் தலைவர் எம்.. வீரன் தெரிவித்தார். ஈப்போ பாராட் தலைவராக எஸ். ஜெயகோபி இருந்து வருகிறார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!