Latestமலேசியா

கிள்ளானில் இன்று காலையில் 3 கார்கள் விபத்தில் சிக்கின இருவர் மரணம் ஜவர் காயம்

கிள்ளான், டிச 22 – இன்று காலை கிள்ளான் பெர்சியரான் சுல்தான் இப்ராஹிமில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட மோசமான விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். அந்த மூன்று வாகனங்களும் கிள்ளானிலிருந்து ஷா அலாம் சென்று கொண்டிருந்தபோது இன்று காலை மணி 6. 23 அளவில் விபத்திற்கு உள்ளானதைத் தொடர் ந்து சுங்கை பினாங் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு ஒன்று விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தீயணைப்பு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

விபத்திற்போது ஒரு காரிலிருந்து வெளியே விழுந்ததால் இருவர் மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தில் இதர ஐவர் காயம் அடைந்தததனர்.

அவர்களில் இரண்டு ஆடவர்கள் , இரண்டு சிறார்கள் மற்றும் கைக்குழந்தையும் அடங்குவர் என கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!