ஜோர்ஜ் டவுன், ஜனவரி 5 – பினாங்கு, ஜோர்ஜ் டவுன், லோரோங் புக்கிட் டம்பாரில், அங்காடி வணிக வளாகத்திலுள்ள், 16 உணவு அங்காடி கடைகள், தீக்கிரையாகின.
அந்த தீ விபத்து குறித்து, இன்று அதிகாலை மணி 5.32 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு அதிகாரி ரோஸ்லி இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, தீ அதிவேகமாக பரவத் தொடங்கி இருந்ததாகவும் ரம்லி சொன்னார்.
அந்த தீவிபத்தில், 16 உணவு அங்காடி கடைகள், 80 விழுக்காடு அழிந்தன.
எனினும், அச்சம்பவத்தில், உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், சம்பந்தப்பட்ட அங்காடி உணவு கடைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டோன் பிரவே ரக கார் ஒன்று மூன்று விழுக்காடு சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை மணி 6.49 வாக்கில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.