Latestஇந்தியா

கட்டார் சிறையில் இருந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் விடுதலை

புதுடில்லி, பிப் 12 – வேவு பார்த்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் சிறை தண்டணையாக குறைக்கப்பட்டு கட்டார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் கட்டார் அரசுடன் தொடர்ச்சியாக நடத்தி வந்த பேச்சுக்களை தொடரந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் இன்று காலையில் புதுடில்லி வந்தடைந்தனர்.

இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால் தாங்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு இல்லையென அவர்கள் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சிறையில் இருந்த எண்மரின் விவகாரத்தில் குவைத் அமிர் எடுத்த முடிவு குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சு நன்றியை தெரிவித்துக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!