காஜாங், நவம்பர் 2 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், காஜாங் சாலை கட்டண சாவடிக்கு அருகே, BMW ஆடம்பர கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதன் ஓட்டுனர் காயமடைந்தார்.
அந்த காரில் பயணித்த இதர இரு பயணிகள் வெளியே தூக்கியெறியப்பட்டனர்.
இன்று அதிகாலை மணி ஐந்து வாக்கில், ஆடவர்கள் இருவரும், பெண் ஒருவரும் பயணித்த அந்த கார் விபத்துக்குள்ளானதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.
அவர்களில் ஆடவர் ஒருவர் ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்ட வேளை ; இதர இருவர் வெளியே தூக்கியெறியப்பட்டனர்.
ஓட்டுனர் இருக்கையில் சிக்கி இருந்தவரை, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் நான்கு நிமிடங்களில் மீட்டனர்.
பின்னர், விபத்தில் சிக்கிய அனைவரும், சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.