Latestமலேசியா

சாலையில் அடாவடி சாகசம் புரிந்த ‘சூப்பர்மேன்கள்’ ; போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், டிசம்பர் 27 – பஹாங், கிழக்கு கரை நெடுஞ்சாலையில், தெமர்லோ ஓய்வுப் பகுதிக்கு அருகே, விபத்துக்குள்ளாவதற்கு முன், ஆபத்தான முறையில் சகாசம் செய்யும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த 28 வினாடி வைரல் காணொளியில், காணப்படும் சாலை “சூப்பர்மேன்களை” போலீசார் தேடி வருகின்றனர்.

அதில் காணப்படும் மோட்டார் சைக்கிளோட்டிகள், விபத்துக்குள்ளாவதற்கு முன், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, “ஸ்டண்ட்” அடாவடி சாகசம் புரிவதை காண முடிகிறது.

அதனால், பின்னால் பயணித்த இதர சிலர், விபத்துக்குள்ளானவர்களை தவிர்க்க முடியாமல், அவர்களை மோதி கீழே விழுகின்றனர்.

அச்சம்பவம் தொடர்பில், முழு விசாரணை மேற்கொள்ள பஹாங் மாநில போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறை பணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தாமாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!