ஷா அலாம், நவ 24 – பெர்சத்துவின் தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதில்லையென டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் கட்சித் தேர்தலில் பெர்சத்து தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என ஷா அலாமில் நடைபெற்ற அக்கட்சியின் ஆண்டு பேராளர் மாநாட்டில் தெரிவித்தார். பெர்சத்துவில் தகுதிவாய்ந்த தலைவர்கள் இருப்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு நேரம் வந்துவிட்டதாக தாம் முஹிடின் கூறினார்.
எனவே, 2016-ஆம் ஆண்டு கட்சி அமைக்கப்பட்டது முதல் வகித்துவரும் தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லையென அவர் கூறினார். கட்சியை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கட்சியில் அதிகாரப் பரிமாற்றம் சுமுகமான முறையில் நடைபெறும் என முஹிடின் நம்பிக்கை தெரிவித்தார்.