Latestமலேசியா

மாணவியிடம் பாலியல் தொந்தரவு; ஆசிரியரை, பணம் கேட்டு மிரட்டிய தந்தையும் கைது!

ஈப்போ, பிப்ரவரி 15 – பேராக்கில் தனது மகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாகக் கூறி, ஆசிரியரை மிரட்டி பணம் கேட்ட தந்தை கைதாகியுள்ளார்.

14 வயதான தனது மகள் மற்றும் அந்த ஆசிரியரை உட்படுத்திய பாலியல் தொந்தரவு விவகாரத்தைத் தீர்க்க, பாதுகாவலராக வேலை செய்யும் 50 வயது அவ்வாடவர் இச்செயலினை புரிந்துள்ளார்.

தனது மகளிடம் பல தடவை அந்த 59 வயது ஆசிரியர் தவறாக நடந்துக் கொண்டிருப்பதாக தந்தை சந்தேகப்பட; இதையடுத்து அவர், பணம் கேட்டு அந்த ஆசிரியரை மிரட்டியிருக்கின்றார்.

இதனால் ஆசிரியர் போலிஸில் புகார் செய்ய, தந்தை கைதானதாக ஈப்போ காவல் துறை தலைவர் எஸிஸ்டன் கமிஷனர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

அதே சமயம், பாலியல் தொந்தரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரும் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை ஐந்து தடவை ஆசிரியர் தம்மிடம் தவறாக நடந்துக் கொண்டதாக அம்மாணவி போலிஸ் புகாரில் கூறியுள்ளார்.

2017 சிறார் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை, அவரும், அம்மாணவின் தந்தையும் போலிஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றதும் மேல் நடவடிக்கைகாக அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலத்திடம் ஒப்படைக்கப்படும் என யாஹ்யா ஹசான் மேலும் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!