மத்தியக் கிழக்கு, மார்ச்-8, பிரபல காப்பி உணவக நிறுவனமான Starbucks பெருநட்டம் காரணமாக மேற்கு ஆசியாவில் மட்டும் இரண்டாயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.
கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் வெடித்தது முதல் பாலஸ்தீன ஆதரவு தரப்பினர் மேற்கொண்ட புறக்கணிப்பு நடவடிக்கையால் Starbucks அங்கு பெருநட்டத்தை அடைந்திருக்கிறது.
“இது உண்மையிலேயே ஒரு கடினமான முடிவு; இருந்தாலும், இந்த ஆறு மாதங்களாக சந்தித்து வரும் கடும் சவாலில் இருந்து வெளியேற, வேலை நீக்கத்தை விட எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என மேற்காசிய வட்டாரத்தில் Starbucks நிறுவனத்தை நடத்தும் உரிமையைப் பெற்ற Alshaya குழுமம் கூறியது.
இஸ்ரேலை ஆதரிக்கும் வர்த்தக பெருநிறுவனங்களின் பொருட்களைப் புறக்கணிக்க உலகளவில் மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தால், Starbucks பில்லியன் டாலர் கணக்கில் நட்டத்தைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக மேற்காசியாவில் Starbucks-சின் வியாபாரம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்தது.
அப்புறக்கணிக்கும் இயக்கத்தில் அமெரிக்க வாடிக்கையாளர்களும் இணைந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.