Latestமலேசியா

ஆறு மாடுகளை புலிகள் அடித்துக் கொன்றன; குடியானவருக்கு 15,000 ரிங்கிட் இழப்பு

கோப்பேங், நவ 3 – கோப்பேங்கிற்கு அருகே கம்போங் ஜஹாங்கை சேர்ந்த குடியானவருக்கு சொந்தமான ஆறு மாடுகளை புலி அடித்துக் கொன்றதால் தமக்கு 15,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இறந்த மாடுகளின் உடல்களில் புலி பிராண்டியதற்கான அடையாளங்கள் மற்றும் மாடுகள் இறந்து கிடந்த இடத்தில் புலியின் கால் பாத சுவடுகளைக் கண்டு தாம் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக 82 வயதுடைய முகமட் நூர் சாரிப் தெரிவித்தார். இந்த சம்பவத்தினால் தமக்கு 15,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே மாடுகள் இறந்து கிடந்த பகுதியில் புலியின் நடமாட்டம் இருந்து வருவதாக பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு மற்றும் பூங்கா துறையும் உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார். இதனிடையே சுங்கை சிப்புட்டில் குவாலா மு மற்றும் கம்பாரில் கம்போங் சாஹோம் வட்டாரத்திலும் புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக பேரா வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!