தெலுக் இந்தான், நவ 30 – “Geng Bulat” எனும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த லோரி ஓட்டுனரின் உதவியாளர் ஒருவர் போலிஸ்காரரை கொலை செய்ய முயற்சித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். இருப்பினும் 28 வயது ஹபீஸ் நஹரோதீன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளான். கடந்த அக்டோபர் 23ஆம் திகதி தெலுக் இந்தான் செண்டெரோங் பலாய் எனும் இடத்தில் ஒரு பள்ளிவாசலின் முன் மாலை 5.50 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவன் தான் ஓட்டி வந்த காரை வேண்டுமென்றே அபாயகர முறையில் ஓட்டி சம்பந்தப்பட்ட போலிஸ்காரருக்கு மரணம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குற்றம் நிருபிக்கப்பட்டால், அவனுக்கு 20 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். தற்போது அவன் 10,000 ரிங்கிட் ஜாமினி விடுவிக்கப்பட்டிருக்கிறான்.