கோலாலம்பூர், ஜன 23 – தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலாங்கூரில் பத்துமலை திருத்தலத்திற்கும் , பினாங்கு ஜாலான் கெபுன் புங்காவிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்திற்கும் இலவச பஸ் சேவைகளை ரேபிட் பஸ் (Rapid Bus Sdn Bhd) ஏற்பாடு செய்துள்ளது. நாளை ஜனவரி 24ஆம் தேதி விடியற்காலை 5 மணியிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி நள்ளிரவு வரை கோலாலம்பூரில் பத்துமலை திருத்தலத்திற்கான இலவச பஸ் சேவை நடைபெறும் . 10 முதல் 15 நிமிடங்களுக்கான இந்த இலவச பஸ் சேவை சென்ட்ரல் மார்க்கெட்டிலிருந்து பத்துமலைக்குக்கும், கோம்பாக் LRT நிலையத்திலிருந்து பத்துமலைக்கும், கம்போங் பத்து MRT நிலையத்திலிருந்து பத்துமலைக்கும் இந்த இலவச பஸ் சேவை நடைபெறும்.
பினாங்கில் ஜனவரி 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 26ஆம் தேதி அதிகாலை 2 மணிவரை 20 முதல் 30 நிமிடங்களுக்கும் நள்ளிரவு 1 மணியிலிருந்து விடியற்காலை 5 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் இந்த இலவச பஸ் சேவை இருக்கும்.ஜெட்டி – அட்வென்டிஸ்ட்டிலிருந்து ஜாலான் கெபுன் புங்காவிலுள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு இலவத பஸ் சேவையை ரேபிட் பஸ் (Rapid Bus Sdn Bhd) நடத்தும்.