Latestமலேசியா

ஜோகூரில் குடிநுழைவுத்துறை நடவடிக்கையில் 5 இந்திய பிரஜைகளுடன் 32 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாரு , பிப் 20 – ஜோகூர் மாநகரின் மையப் பகுதி மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் ஐந்து இந்திய பிரஜைகள் மற்றும் இரண்டு வயது குழந்தையோடு 32 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மூன்று மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் மூன்று பெண்கள் உட்பட 15 மியன்மார் பிரஜைகள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு ஆடவர்கள், இரண்டு வயது குழைந்தையின் பெற்றோர் உட்பட நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பின்ஸ் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் அதிக அளவில் கூடும் இடங்கள், வேலை பெர்மிட் இன்று வேலைசெய்யும் உணவகங்கள் மற்றும் நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தவர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் Baharuddin Tahir தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!