கெமமான், டிசம்பர் 8 – ஆறு வயது உறவுக்கார சிறுமியை, இயற்கைக்கு புறம்பான வகையில், பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும், 13 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவனுக்கு எதிராக, இன்று Kemaman Sesyens நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து அவன் விசாரணை கோரினான்.
நவம்பர் 25-ஆம் தேதி, நண்பகல் மணி 12.23 வாக்கில், Kemaman-னிலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
“Juvenile” அல்லது வயது குறைந்த குற்றவாளியான அவனுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 377 C பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூவாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவன் இன்று விடுவிக்கப்பட்டான்.
இவ்வழக்கு விசாரணை ஜனவரி மூன்றாம் தேதி செவிமடுக்கப்படும்.