கோலாலம்பூர், பிப்ரவரி 27 – அண்மையில் STPM தேர்வெழுத சென்ற மாணவி ஒருவருக்காக, கிராப் ஓட்டுனர் ஒருவர் பிரார்த்தனை செய்யும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
ஈவா எனும் சம்பந்தப்பட்ட மாணவி பதற்றம் இன்றி, நல்ல முறையில் பரீட்சை எழுத வேண்டுமென சம்பந்தப்பட்ட ஓட்டுனர் பிரார்த்தனை செய்துக் கொண்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பான 39 வினாடி காணொளியை, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி ஈவா தனது @4nstsi4 எனும் டிக் டொக் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில், தேர்வு எழுத செல்லும் ஈவா, தமக்கு பதற்றமாக இருப்பதாக, சம்பந்தப்பட்ட கிராப் ஓட்டுனரிடம் கூறுகிறார்.
அதற்கு அவர், “பதற்றம் வேண்டாம், நீங்கள் நன்றாக தேர்வு எழுதுவீர்கள். எல்லாமே நன்றாக நடக்கும்” என்கிறார்.
அதோடு நில்லாமல், உடனடியாக ஈவா நல்ல முறையில் தேர்வெழுத அவர் பிரார்த்தனை செய்துக் கொள்ளும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
அந்த கிராப் ஓட்டுனரின் பிரார்த்தனை, நல்ல முறையில் தாம் தேர்வெழுத உதவியதாக பதிவிட்டுள்ள ஈவா, தனது நாளையும் நிறைவான நாளாக மாற்றியதாக கூறிப்பிட்டுள்ளார்.
அந்த காணொளியை இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; சம்பந்தப்பட்ட கிராப் ஓட்டுனரை தெரிந்த பலர், அவர் மிகவும் நல்லவர், பண்பானவர் என பதிவிட்டு வருகின்றனர்.