Latestமலேசியா

மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்

கோலாலம்பூர், டிச 12 – கிளந்தான், மச்சாங் கில் தனது வீட்டில் கூரையை பழுதுபார்த்துக்கொண்டிருந்த லோரி ஓட்டுனர் ஒருவர் மின்சாரம் தாக்கியதால் மரணம் அடைந்தார். 54 வயதுடைய ஜோஹரி தஹர் என்ற அந்த ஆடவர் நேற்று மாலை மணி 5 அளவில் சுயநினைவின்றி இருந்ததை அவரது மனைவி கண்டதாக மச்சாங் போலீஸ் தலைவர் முகமட் அட்லி மாட் டாட் தெரிவித்தார். வீட்டின் கூரையை பழுதுபார்த்துக்கொண்டிருந்த ஜோஹரி தஹர் திடீரென இரும்பு ஒன்றில் கை வைத்தபோது அதில் பாய்ந்திருந்த மின்சாரம் அவரை தாக்கியது. உடனடியாக மாச்சாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் நேற்றிரவு 7 மணியளவில் அங்கு அவர் இறந்தார் என முகமட் அட்லி மாட் டாட் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!