Latestமலேசியா

குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த மித்ரா மூலம் உதவி – ஒற்றுமைத்துறை அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 8 – குறைந்த வருமானம் பெறும் B40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையை அதிகரிப்பதற்கு மித்ரா மூலம் உதவும் கடப்பாட்டை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ Aaron ago Dagan தெரிவித்திருக்கிறார். கல்வி, பொருளாதாரம், சமூகத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இந்திய சமூகத்தின் சுபிட்சத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார் .

தொழில் திறன் , மனித மூலதன மேம்பாடு , தொழில் முனைவர் வாய்ப்புக்கள் போன்றவை வலுப்படுத்தப்படும். மேலும் மலேசியாவிலுள்ள அனைத்து இனங்களிடையே இருந்துவரும் வறிய ஏழ்மை நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசாங்கத்தின் கடப்பாடாக Madani பொருளாதார நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படும். மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார உருமாற்றத்திற்கான குறுகிய, மிதமான மற்றும் நீண்ட கால திட்டம் குறித்து பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் Tuan Syahredzan Johan நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Aaron இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!