சைபர்ஜெயா, பிப் 17 – ஷா அலாம் புக்கிட் ராஜா தொழில்மயப் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவுனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது தெரிவித்திருக்கிறார். அமோனியா வாயு கசிவுக்கு உள்ளான 18 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 10 பேர் ஷா அலாம் மருத்துவமனையிலும் , ஐவர் கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையிலும் மூவர் சுங்கை பூலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுல்கிப்லி கூறினார்.