செமெஞ்ஞே, நவ 25 – செமெஞ்ஞே அருகே ஒரு பழைய கட்டிடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் நொருங்கியது.
இச்சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. அவ்வாகன உரிமையாளர் காரை அந்த பழைய கட்டிடம் அருகே நிறுத்திவிட்டு அருகாமையில் உள்ள கடைக்குச் சென்ற சமயம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பயன்பாட்டில் இல்லாத அக்கட்டிடத்தின் அமைப்பு மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அதன் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.