Latestமலேசியா

மலையேறும்போது காணாமல்போன ஆடவர் இறந்து கிடந்தார்

ஷா அலாம், மார்ச் 28 – ஷா அலாம், செக்சன் U16 இல் உள்ள மலைக்கு அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட 64 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடல் நேற்றிரவு மணி 7.50 அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Iqbal Ibrahim உறுதிப்படுத்தினார். அந்த ஆடவர் நேற்று காலை மணி 9.30 தனியாக அந்த மலைக்கு நடந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. வீட்டிற்கு திரும்புவதற்கான வழியை தவறவிட்டதால் சிரமப்படுவதாக அந்த நபர் தமது மகனுக்கு மாலை மணி
3. 43அளவில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து Bukit Jelutong தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த ஆடவர் மரணம் அடைந்த நிலையில் பொதுமக்களில் ஒருவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் சவப் பரிசோதனைக்காக Shah Alam மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக Mohd Iqbal கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!