Latestமலேசியா

பினாங்கில் ராயாவை முன்னிட்டு 13 தண்ணீர் வண்டிகள் தயார்நிலையில்

பினாங்கு, ஏப் 8 – அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள ராயா பண்டிகைக் காலத்தில் எதிர்பாரா நீர் தடை ஏற்பட்டால், நிலைமையை சமாளிக்க பினாங்கு நீர் விநியோகத் துறை 13 தண்ணீர் வண்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்த வறட்சி காலத்தில் நீர் விநியோகத் தடை ஏற்படுமாயினி அதனை எதிர்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அத்துறையின் தலைமை செயல் அதிகாரி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரியில் அதிகமாக பினாங்கில் ஒரு நாளைக்கு 927 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இது 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் வருடாந்திர பயன்பாட்டோடு ஒப்பிடுகையில் 50 மில்லியன் லிட்டர் அதிகமாகும் என அவர் கூறினார்.

இந்தப் பண்டிகை காலக்கட்டத்திலுக் நீர் பயன்பாடு ஏறக்குறைய 927 மில்லியன் லிட்டராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் தேவை ஏற்பட்டால் இன்னும் கூடுதலாக நீறும் ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலத்திலும் இது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்தி விரயத்தை தவிர்க்குமாறும் அவர் கேட்டு பொதுமக்களை கேட்டு கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!