Latestசிங்கப்பூர்

ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடு சிங்கப்பூர் ; மலேசியாவுக்கு ஒன்பதாவது இடம்

சிங்கப்பூர், மார்ச் 22 – 2023-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக சிங்கப்பூர் பட்டியலிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரை அடுத்து, தைவான், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.

2024 உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், மலேசியா ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

இவ்வேளையில், உலகளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் 30-வது இடத்தில் உள்ள வேளை ; அந்த பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அந்த பட்டியலில் கடைசி மூன்று இடங்களை லெசோதோ, லெபனான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!