ஷா ஆலம், ஜன 12 – Padu எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பொது மக்கள் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூரில் நடமாடும் முகப்பிடங்களை மலேசிய புள்ளி விபரத்துறை திறந்துள்ளது.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த தரவுத் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புவோர் கைத்தொலைபேசி, அடையாள அட்டை, குடும்ப உறுப்பினர்களின் I/C மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில புள்ளி விபரத் துறை கூறியுள்ளது.
இதனிடையே இந்த பதிவு நடவடிக்கையில் பங்கேற்று பயனடைய கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும், பொது மக்கள் Padu அகப்பக்கத்தில் வாயிலாகவும் இந்த Padu தரவுத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அத்துறை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.