சுங்கை பட்டாணி; நவ 22 – இன்று காலை சுங்கை பட்டாணி, தாமான் ஶ்ரீ இம்பியானில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 வீடுகள் முற்றாக அழிந்தன.
அதிகாலை மணி 2.49க்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதாக சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் இச்மைல் முகமட் சாய்ன் தெரிவித்தார்.
இவ்விபத்தில், ஒருவர் மூச்சுத் திணரி பலியாகவிருந்த நிலையில், அவர் சுல்தால் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
இதில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையான நிலையில் தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.