கோலாலம்பூர், டிச 19 – தொலைபேசி அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் புலனம் வாயிலாக அதிகமான மலேசியர்கள் பண மோசடிக்கு உள்ளாகியுள்ளனர் என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்காவ் (Macau) மோசடி திட்டம் உட்பட பல்வேறு இணைய மோசடி திட்டங்களால் பண மோசடிக்கு உள்ளானவர்களில், மூன்றில் இரண்டு பகுதியினர் அல்லது 78 விழுக்காட்டினர் தங்களது வாழ்நாள் சேமிப்பை தொலைபேசி மூலம் பெறப்படும் அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் தகவலால் பணத்தை இழந்துள்ளனர்.
நாட்டில் 1,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 56 விழுக்காட்டினர் அல்லது 762 பேர் தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடிக்கு உள்ளாகினர். இதர 54 விழுக்காட்டிர் வாட்ஸ்அப் புலனம் மூலம் ஏமாந்துள்ளனர். மோசடி திட்டத்தினால் பணத்தை பறிகொடுத்தவர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே போலீசில் புகார் செய்கின்றனர். பலர் மோசடி திட்டங்களால் பணம் இழந்தது குறித்து புகார் செய்யாமல் மௌனமாக இருந்துவிடுகின்றனர்.